5924.

மண்ணில்கண்ட, வானவரை வலியின் கவர்ந்த,
                              வரம் பெற்ற,
எண்ணற்கு அரியஏனையரை இகலின் பறித்த-
                              தமக்கு இயைந்த
பெண்ணிற்குஇசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே
                            இடை பிழைத்த-
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டு,
                            கட்டினார்.

     மண்ணில் கண்ட -நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்; வானவரை
வலியின் கவர்ந்த -
தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக்
கொண்டு வந்த பாசங்களும்; வரம் பெற்ற - வரங்களால் பெற்றிருந்த
தெய்வத்தன்மைப் பாசங்களும்; எண்ணற்கு அரிய ஏனையரை இகலின்
பறித்த -
எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக்
கொண்ட பாசங்களும் (ஆக); கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம்
இட்டு,கட்டினார் -
தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம்
கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தமக்கு
இயைந்தபெண்ணிற்கு இசையும் -
தங்களுக்கு மனைவியராய்ப்
பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த; மங்கலத்தின் பிணித்த கயிறே
இடை பிழைத்த  -
 திருமாங்கல்யம் என்னும் தாலியில்
பிணித்துக்கட்டியி்ருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு
போகப்படாமல் தப்பின.

     அரக்கியர்களின்தாலிக்கயிறு தவிர ஏனைய கயிறுகள் எல்லாவற்றையும்
கொண்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள் என்பதாம்.         (120)