5925. | 'கடவுள்-படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே விடுவித்துஅளித்தார், தெவ்வரே; வென்றேன் அன்றே இவர் வென்றி; சுடுவிக்கின்றது,"இவ் வூரைச் சுடுக" என்று உரைத்த துணிவு' என்று, நடு உற்று அமையஉற நோக்கி, முற்றும் உவந்தான்-நவை அற்றான். |
நவை அற்றான் -குற்றமற்றவனாகிய அனுமான்; கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே - தெய்வத்தன்மை உடையபிரம்மாத்திரத்தை மீறி, தருமநிலையைத் தவறினேனாகாதபடி; தெவ்வரேவிடுவித்து அளித்தார் - பகைவர்களாகிய அரக்கர்களே (என்னைப்பிரம்மாத்திரத் தினின்றும்) விடுவித்துஉதவினார்கள்; இவர் வென்றி வென்றேன் அன்றோ - இவர் இது வரை அடைந்திருந்த வெற்றியை நான் வென்று விட்டேன் அல்லனோ ?; சுடுவிக்கின்றது - இராவணன் என்னை (அரக்கர்களைக் கொண்டு) வால் கொளுத்துகின்ற முயற்சி; இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு - 'இந்த ஊரை நீ எரிப்பாயாக' என்று எனக்குச் சொன்ன தெளி பொருளாகும்; என்று - என்று எண்ணி; நடு உற்று அமையம் உற நோக்கி - அரக்கர்களின் நடுவில் இருந்து கொண்டு (அவர்களிடத்தினின்று தான் அகல்வதற்குரிய) சமயத்தை எதிர்நோக்கி; முற்றும் உவந்தான் - நிரம்ப மகிழ்ச்சியுற்றான். அனுமனது வாலில்நெருப்பு வைக்குமாறு இராவணன் அரக்கர்களுக்கு இட்ட ஆணை, 'இலங்கை நகரைச் சுடுவாய்' என்று தனக்கு இராவணன் அனுமதி கொடுத்ததாக எண்ணி அனுமான் மகிழ்ந்தான் என்க. (121) |