5950.

நீலம்நின்ற நிறத்தன, கீழ் நிலை
மாலின் வெஞ்சின யானையை மானுவ;
மேல் விழுந்துஎரி முற்றும் விழுங்கலால்
தோல் உரிந்துகழன்றன, தோல் எலாம்.

     நீலம் நின்றநிறத்தன - கருநிறம்பொருந்தியனவாய் இருந்த; தோல்
எலாம் -
யானைகள் எல்லாம்; மேல் எரி விழுந்து முற்றும் விழுங்கலால்
-
தம்மீது நெருப்பு விழுந்து உடம்பு முழுவதும் பற்றிக் கொண்டதனால்; தோல்
உரிந்து கழன்றன -
தோல்கள் உரிந்து நீங்கப் பெற்றவையாய்; கீழ் நிலை
மாலின் -
கிழக்குத் திசையில் உள்ள இந்திரனுடைய; வெம்சின யானையை
மானுவ -
கொடிய கோபத்தோடு கூடிய ஐராவதம் என்னும் (வெள்ளை)
யானையை ஒத்தனவாயின.

    தீப்பற்றியதனால் தோல் உரிந்து வெள்ளெலும்பு தோன்ற நின்ற
யானைகள், இந்திரனுடைய ஐராவதம் என்ற வெள்ளை யானையை
ஒத்திருந்தன என்க. மால் - இந்திரன்.                           (8)