5952. | பொடித்துஎழுந்து பெரும் பொறி போவன இடிக் குலங்களின்வீழ்தலும், எங்கணும் வெடித்த; வேலை வெதும்பிட, மீன் குலம் துடித்து, வெந்து,புலர்ந்து, உயிர் சோர்ந்தவால். |
பொடித்து எழுந்துபோவன பெரும் பொறி - (நெருப்பினின்றும்) சிதறி எழுந்து போவனவாகிய பெரிய தீப்பொறிகள்; இடி குலங்களின் எங்கணும் வீழ்தலின் - இடிக்கூட்டம் போல எல்லா இடங்களிலும் வீழ்ந்த அளவில்; வெடித்த வேலை - வெடி ஓசை போன்ற ஓசையை உடைய கடல்,; வெதும்பிட மீன் குலம் துடித்து - கொதிப்படைய அக்கடலில் உள்ள மீன் கூட்டங்கள் (வெப்பம் தாங்காமல்) துடித்து; வெந்து, புலர்ந்து உயிர் சோர்ந்த- தாபமடைந்து வாடி, உயிர் ஒடுங்கி இறந்தன. நெருப்புப்பொறிகள் எல்லா இடங்களிலும்விழுந்ததனால், கடல் கொதித்தது; அதனால், அங்கிருந்த மீன்குலம் வெப்பம் தாங்காமல், துடிப்புண்டும் வெந்தும் காய்ந்தும் இறந்தன என்பதாம். (10) |