5959.

தேன்அவாம் பொழில் தீப் பட, சிந்திய
சோனைமா மலர்த்தும்பி, 'தொடர்ந்து, அயல்
போன தீச் சுடர்புண்டரிகத் தடங்
கானம் ஆம்' என,வீழ்ந்து, கரிந்தவே.*

     தேன் அவாம்பொழில் - தேன் மிக்க(அந்நகரத்துச்) சோலைகளில்;
தீ பட - நெருப்புப் பற்ற (அதனால்); சிந்திய - சிதறிய; சோனைமாமலர்
தும்பி -
நீருண்ட மேகம் போல மலர்களில் மொய்த்துக் கொண்டிருந்த
வண்டுகள்; தொடர்ந்து அயல் போன - அந்தச் சோலைகளைத் தொடர்ந்து
அப்பாலும் பரவிச் சென்ற; தீ சுடர் - நெருப்புச் சுடர்களை (கண்டு);
புண்டரிகத்தடம் கானம் ஆம் என வீழ்ந்து கரிந்த - பெரிய
தாமரைக்காடுஎன்று மாறாகக் கருதி, அவற்றில் போய் விழுந்து கருகிப்
போயின.

     நெருப்புச்சுடரின் மிகுதியான தோற்றத்தை, தாமரைக்காடு என மாறாகக்
கருதிய வண்டுகள் அதில் விழுந்து கருகின என்பதாம்.               (17)