5962. | கார் முழுக்க எழும் கனல் கற்றை போய் ஊர் முழுக்கவெதுப்ப உருகின; சோர் ஒழுக்கம்அறாமையின், துன்று பொன் வேர் விடுப்பதுபோன்றன, விண் எலாம்.* |
கார் முழுக்கஎழும் கனல் கற்றை - மேகங்களை முழுகச்செய்யும்படிமேலே எழுகின்ற நெருப்பின் தொகுதி; போய் ஊர் முழுக்க வெதுப்ப -மேற் சென்று, (பொன்மயமான) அமராவதி நகரம் முழுவதையும் சுட்டெரிக்க;உருகின சோர் பொன் ஒழுக்கம் அறாமையின் - (அதனால்) உருகிஒழுகுகின்ற பொன்னின் தாரைகள் இடைவிடாது பெருகுதலால்; விண் எலாம்துன்று வேர் விடுப்பது போன்றன - அவ்வான நாடு முழுவதும், அடர்ந்தமரத்தின் வேரைக் கீழே இறங்க விடுவது போன்று விளங்கின. மேகங்கள்முழுகும்படி எழுந்த தீச்சுடர், பொன் மயமான அமராவதி நகரை எரிக்க, அது உருகியது. உருகிய பொன் ஒழுக்கு, மரத்தின் வேர்கள் போன்று விளங்கிற்று என்பதாம். (20) |