அரக்கரும்அரக்கியரும் உற்ற அவலம்

5966.

எழுந்துபொன்தலத்து ஏறலின், நீள் புகைக்
கொழுந்து சுற்ற,உயிர்ப்பு இலர், கோளும் உற்று
அழுந்துபட்டுளர்ஒத்து, அயர்ந்து, ஆர் அழல்
விழுந்துமுற்றினர்-கூற்றை விழுங்குவார்.

     கூற்றைவிழுங்குவார் - யமனையும் விழுங்கக்கூடியஆற்றல்
அமைந்தசில அரக்கர்கள்; எழுந்து பொன் தலத்து ஏறலின் - (அந்த
நெருப்புக்குத்தப்பிப் பிழைக்க மேலே) எழுந்து பொன்னுலகமான
சுவர்க்கத்துக்கு ஏறும்போது; நீள் புகை கொழுந்து சுற்ற - கொழுந்துவி்ட்டு
எழுந்த நீண்ட புகைசுற்றிக் கொண்டதனால்; உயிர்ப்பு இலர் - மூச்சுவிட
மாட்டாதவர்களாய்;கோளும் உற்று - அப் புகையையும் உள்ளே கொண்டு
விட்டபடியால்;அழுந்து
 பட்டுளர் ஒத்துஅயர்ந்து - நீருள்
அழுந்தியவர்களைப் போல மயக்கமுற்றவர்களாகி; ஆர் அழல் விழுந்து
முற்றினர் -
நீங்குதற்கு அருமையான நெருப்பில் விழுந்து இறந்தனர்.

     அரக்கர்கள்,மேலே எழ முயன்றும், முடியாமல், புகையால் சூழப்பெற்று,
அதில் அழுந்தி மயக்கம் அடைந்து, அந்நெருப்பிலேயே விழுந்து இறந்தனர்
என்பதாம். தலம் - இடம்; உயி்ர்ப்பு - மூச்சுவிடுதல்; முற்றினர் - முடிந்தார்கள்.
                                                          (24)