5976.

மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி
                           மகவை
அருங் கையால்பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற,
நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக்
கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி.

     மருங்கின் மேல்ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை
வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொரு
சிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு
பின்அரற்ற -
வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர;
அரக்கியர் -
அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய
சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக்
கொள -
நெறித்த
 கூந்தலிலே சுறு சுறு என்றுநெருப்புபற்ற; கதறி -
வாய்விட்டுக் கதறிக் கொண்டு; கருங்கடல் தலை வீழ்ந்தனர் - கரிய
கடலினிடத்துப் போய் விழுந்தார்கள்.

     அரக்கியர்கூந்தலில் நெருப்புப் பற்றியதனால், வலி தாங்காமல் கதறிக்
கொண்டு இடம் விட்டுச் சென்று, கடலில் குதித்தனர் என்பது கருத்து.   (34)