இராவணன் மனையி்ல்தீப்பற்றுதல் | 5980. | நீரைவற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி, தாருவைச் சுட்டு,மலைகளைத் தழல்செய்து, தனி மா மேருவைப் பற்றிஎரிகின்ற கால வெங் கனல்போல், ஊரை முற்றுவித்து,இராவணன் மனை புக்கது- உயர் தீ. |
உயர் தீ -உயர்ந்துஎழுந்த அந்த நெருப்பு; நீரை வற்றிட பருகி - கடல், குளம் முதலிய எல்லா நீர்நிலைகளும் வற்றிப் போகும் படி உறி்ஞ்சி; மாநெடுநிலம் தடவி - பெரிய நீண்ட நிலம் முழுவதும் பரந்து அழித்து; தாருவை சுட்டு - அங்குள்ள மரங்களை எரித்து; மலைகளை தழல் செய்து - மலைகளைத் தணல் போல விளங்கும்படி வேகச் செய்து; தனி மா மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் - ஒப்பற்ற மகா மேரு மலை என்னும் மலையைப் பற்றி எரிகின்ற வெவ்விய கற்பாந்த காலத்து அக்கினி போன்று; ஊரை முற்றுவி்த்து - அந்த இலங்கை நகர் முழுவதையும் எரித்துவிட்டு; இராவணன் மனை புக்கது - இராவணனுடைய அரண்மனையுள் புகுந்தது. ஊழிக் காலத்துநெருப்பு, சுற்றிலும் எரித்த பின்பு, நடுவில் உள்ள மேருமலையில் புகுவது போல, அனுமன் இட்ட தீ, இலங்கை நகர் முழுவதையும் எரித்த பிறகு,இடையில் உள்ள இராவணன் மாளிகையில் புக்கது என்பதாம். (38) |