5983.

சூழும் வெஞ்சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ்சினத்து ஆண் தொழில் இராவணன்
                                  மனையில்-
ஊழி வெங் கனல்உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும்வெந்தென-எரிந்தன, நெடு நிலை ஏழும்.

     சூழும் வெம் சுடர்தொடர்ந்திட - எங்கும் சூழ்ந்த கொடிய
நெருப்புச்சுடர், போய்த் தாவியதனால்; யாவரும் தொடரா ஆழி வெம்
சினத்துஆண் தொழில் இராவணன் -
எவரும் அணுகமுடியாத கடல்
போன்றகொடிய கோபத்தையும், வீரச் செயலையும் உடைய இராவணனது;
மனையின்நெடு நிலை ஏழும் உலகம் என்று உயர்ந்த ஏழும் -
மாளிகையின் நீண்டுஉயர்ந்த ஏழு நிலை மாடங்களும், ஒன்றன் மேல் ஒன்றாக
உயர்ந்துள்ள,உலகம் என்று சொல்லப்படுகின்ற ஏழு இடங்களும்;
ஊழிவெம்கனல் உண்டிடவெந்து என எரிந்தன -
யுகாந்த காலத்துக்
கொடிய நெருப்பு உண்ணஎரிந்தாற் போன்றனவாய் வெந்து அழிந்தன.

      ஊழித்தீயில்மேலுலகங்கள் ஏழும் எரிந்து அழிந்தது போன்று,
இராவணனது மாளிகையின் எழு நிலை மாடங்களும் எரிந்து அழிந்தன
என்பதாம்.                                                (41)