அரக்கர்நிகழ்ந்தது கூற இராவணன் சினத்தல் 5987. | கரங்கள்கூப்பினர், தம் கிளை திருவொடும் காணார், இரங்குகின்ற வல்அரக்கர் ஈது இயம்பின்; 'இறையோய் ! தரங்க வேலையின்நெடிய தன் வால் இட்ட தழலால், குரங்கு சுட்டதுஈது' என்றலும், இராவணன் கொதித்தான். |
தம் கிளைதிருவொடும் காணார் - (அவ்வாறு இராவணன் கேட்டதும்)தமது சுற்றத்தாரையும் வீரம் செல்வம் முதலிய பொலிவையும் இழந்து;இரங்குகின்ற வல் அரக்கர் - ஏங்கிக் கொண்டிருக்கின்ற வலிய அரக்கர்கள்;கரங்கள் கூப்பினர் ஈது இயம்பினர் - கைகளைக் கூப்பிக் கொண்டுபின்வரும் இச்செய்தியைச் சொன்னார்கள்; இறையோய் ! - அரசனே !;தரங்க வேலையின் நெடியதன் வால் இட்டதழலால் - அலைகளை உடையகடலினும் நீண்ட தனது வாலிலே நாம் வைத்த நெருப்பால்; குரங்கு சுட்டதுஈது என்றலும் - அக்குரங்கு எரித்தது இதுவாகும் என்று சொன்ன உடன்;இராவணன் கொதித்தான் - இராவணன் கோபம் கொண்டான். (45) |