அரக்கர்கள்அனுமனுடன் பொருது அழிதல் 

5995.

'பற்றுதிர்! பற்றுதிர் !' என்பார்;
'எற்றுதிர் !எற்றுதிர் ! என்பார்;
முற்றினர்,முற்றும் முனிந்தார்;
கற்று உணர்மாருதி கண்டான்.

     முற்றும்முனிந்தார் - மிக்க கோபம் கொண்டஅந்த அரக்கர்கள்;
பற்றுதிர் பற்றுதிர் என்பார் -
(அனுமனைக் கண்டவுடன்) 'இவனைப்
பிடித்துக் கொள்ளுங்கள் பிடியுங்கள்' என்று சொல்பவரும்; எற்றுதிர் எற்றுதிர்
என்பார் -
'இவனைத் தாக்குங்கள் தாக்குங்கள்' என்று சொல்பவர்களுமாய்;
முற்றினர் -
அனுமனை வளைந்து கொண்டார்கள்; கற்று உணர் மாருதி
கண்டான் -
நூல்களைக் கற்று உணர்ந்த அறிஞனான அனுமன் அவர்களைப்
பார்த்தான்.                                                (53)