5996. | ஏல்கொடுவஞ்சர் எதிர்ந்தார்; கால்கொடுகைகொடு, கார்போல், வேல்கொடுகோலினர்; வெந் தீ வால்கொடு தானும்வளைந்தான். |
ஏல் கொடுவஞ்சர் - (அனுமனைப்பிடிப்பதற்கு) ஏற்றுக் கொண்டு வந்த வஞ்சகர்களான அரக்கர்கள்; கார் போல் கோலினர் - மேகம் போல் அனுமனைச் சூழ்ந்து கொண்டு; கால் கொடு, கை கொடு வேல் கொடு - காலைக் கொண்டும் கையைக் கொண்டும் வேலைக் கொண்டும்; எதிர்ந்தார் தானும் - எதிர்த்தார்கள்; அனுமனும்; வெம்தீ வால் கொடு வளைந்தான் - வெவ்விய நெருப்பு மூண்ட தனது வாலைக் கொண்டு அவர்களை வளைத்தான். ஏல் கொடு -ஏற்றுக்கொண்டு. (54) |