| 5997. | பாதவம்ஒன்று பகுத்தான்; மாதிரம் வாலின்வளைத்தான்; மோதினன்;மோத, முனிந்தார் ஏதியும் நாளும்இழந்தார். |
மாதிரம் வாலின்வளைத்தான் - எல்லாத் திசைகளையும்தனது வாலினால் வளைத்துக் கொண்ட அனுமன்; பாதவம் ஒன்று பகுத்தான் - ஒருமரத்தைப் பெயர்த்தெடுத்து; மோதினன் - அம்மரத்தால் அரக்கர்களை அடித்தான்; மோத முனிந்தார் - அடித்ததனால் கோபம் கொண்டு வந்தவர்களான அந்த அரக்கர்கள்; ஏதியும் நாளும் இழந்தார் - தமது ஆயுதங்களையும் வாழ்நாளையும் இழந்தார்கள். பாதவம் - மரம்;ஏதி - படைக்கலம். (55) |