5997.

பாதவம்ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின்வளைத்தான்;

மோதினன்;மோத, முனிந்தார்
ஏதியும் நாளும்இழந்தார்.

     மாதிரம் வாலின்வளைத்தான் - எல்லாத் திசைகளையும்தனது
வாலினால் வளைத்துக் கொண்ட அனுமன்; பாதவம் ஒன்று பகுத்தான் -
ஒருமரத்தைப் பெயர்த்தெடுத்து; மோதினன் - அம்மரத்தால் அரக்கர்களை
அடித்தான்; மோத முனிந்தார் - அடித்ததனால் கோபம் கொண்டு
வந்தவர்களான அந்த அரக்கர்கள்; ஏதியும் நாளும் இழந்தார் - தமது
ஆயுதங்களையும் வாழ்நாளையும் இழந்தார்கள்.

     பாதவம் - மரம்;ஏதி - படைக்கலம்.                      (55)