5998. | நூறிடமாருதி, நொந்தார் ஊறிட, ஊன் இடுபுண்ணீர், சேறு இட, ஊர் அடுசெந் தீ ஆறிட, ஓடினதுஆறாய். |
மாருதி நூறிடநொந்தார் - அனுமன் அவ்வாறு அடிக்க வருந்தினவர்களான அரக்கர்கள்; ஊறு இட ஊன் இடு புண்ணீர் சேறு இட - காயம் அடைய அதனால், அவர் உடம்பினின்றும் பெருகிய இரத்தமானது, சேற்றை உண்டாக்க; ஊர் அடு செந்தீ ஆறிட ஆறாய் ஓடினது - அவ்வூரை எரித்த சிவந்த நெருப்பு தணியும் படி ஆறாகப் பெருகிற்று. அனுமனால்மோதுண்ட அரக்கரின் இரத்தப் பெருக்கு பற்றிக் கூறப்பட்டது. (56) |