| 5999. | தோற்றினர் துஞ்சினர் அல்லார் ஏற்று இகல்வீரர், எதிர்ந்தார்; காற்றின் மகன்,கலை கற்றான், கூற்றினும் மும்மடி கொன்றான். |
துஞ்சினர்அல்லோர் தோற்றினர் ஏறு இகல்வீரர் - இறந்தவர்கள் போக அங்குத் தென்பட்டவர்களான ஆண்சிங்கம் போன்ற வீரர்கள்; எதிர்ந்தார் - அனுமனை எதிர்த்தார்கள்; காற்றின் மகன் கலை கற்றான் - வாயு தேவன் மகனும் எல்லாக்கலைகளையும் கற்றவனுமாகிய அனுமன்; கூற்றினும் மும்மடி கொன்றான் - யமனைவிட மூன்று மடங்கு அவர்களைக் கொன்றுவிட்டான். (57) |