| 6001. | தோய்த்தனன் வால்; அது தோயக் காய்ச்சின வேலைகலந்தார், போய்ச் சிலர்பொன்றினர் போனார் 'ஏச்சு' என,மைந்தர் எதிர்ந்தார். |
வால்தோய்த்தனன் - அனுமன் தனது வாலைக்கடலில் தோய்த்தான்; அது தோய - (நெருப்பு பிடித்த) அந்த வாலைத் தோய்த்ததினால்; காய்ச்சின வேலை போய் கலந்தார் சிலர் - கொதிப்படைந்த கடலில் சென்று முழுகியவர்களில் சிலர்; பொன்றினர் போனார் மைந்தர் - இறந்தொழிந்தார்கள் (சில இறவாது நின்ற) வீரர்கள்; ஏச்சு என - (இவ்வாறு கடலில் மூழ்குவது) நமக்கு இழிவு என்று கருதி; எதிர்ந்தார் - அனுமனை எதிர்த்தார்கள். மைந்தர் -வலிமை உடையவர்; வீரர். (59) |