வான்வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல் அறுசீர் ஆசிரியவிருத்தம் | 6007. | 'நீங்குவென் விரைவின்' என்னும் நினைவினன், மருங்கு நின்றது ஆங்கு ஒரு குடுமிக்குன்றை அருக்கனின் அணைந்த ஐயன், வீங்கினன்,உலகை எல்லாம் விழுங்கினன் என்ன; வீரன் பூங் கழல் தொழுதுவாழ்த்தி, விசும்பிடைக் கடிது போனான். |
விரைவின்நீங்குவென் என்னும் நினைவினன் - சீக்கிரத்தில் இந்த இலங்கையினின்றும் போவேன் என்கின்ற எண்ணம் உடையவனாய்; ஆங்கு மருங்கு நின்றது ஒரு குடுமிக்குன்றை - அந்த இலங்கையின் அருகேயிருந்த சிகரத்தை உடைய ஒரு மலையை; அருக்கனின் அணைந்த ஐயன் - சூரியனைப் போன்று சென்று சேர்ந்த அனுமன்; உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீங்கினன் - எல்லா உலகங்களையும் உட் கொண்டவனான திருமால் போன்று தன் வடிவம் பூரித்து நின்று; வீரன் பூங்கழல் தொழுது - இரகு குல வீரனான இராமபிரானது அழகிய திருவடிகளை, (தனது மனத்தால் நினைத்து) வணங்கி்த் துதித்து; விசும்பிடை கடிது போனான் - ஆகாய வழியாக விரைவில் சென்றான். (1) |