| 6011. | 'தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி, மேல் முறைவைத்தேம்; அண்ணல் ! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி; மான வாள் முகமேநங்கட்கு உரைத்தது மாற்றம்' என்று, தாம் நுகர்சாகம் எல்லாம் முறை முறை சிலவர் தந்தார். |
சிலவர் -சில வானரவீரர்கள்; அண்ணல் மானம் வாள் முகமே நங்கட்கு மாற்றம் உரைத்தது - (அனுமனை நோக்கி) பெரியோய் ! பெருமையும் ஒளியும் பொருந்திய உன் முகமே எங்களுக்கு (பிராட்டியைக் கண்ட நற்செய்தியாகிய) சொற்களைத் தெரிவித்துவிட்டது; நறியன தேனொடு கிழங்கும் காயும் அரிதின் தேடி மேல் முறை வைத்தோம் - (ஆதலால்) நல்ல சுவையுள்ளனவான தேனையும் கிழங்குகளையும் காய்களையும் அருமையாகத் தேடிக் கொணர்ந்து முன்னமே ஒழுங்காக வைத்துள்ளோம்; நுகர்ந்தனை மெலிவு தீர்தி என்று - நீ உண்டு, களைப்பைத் தீ்ர்த்துக் கொள்வாயாக என்று சொல்லி; தாம் நுகர் சாகம் எல்லாம் முறை முறை தந்தார் - தாம் விரும்பி உண்ணக் கூடிய இலையுணவு முதலியவற்றை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள். (5) அனுமன் மேனியில் உள்ளபுண்களை நோக்கி வானரர் வருந்துதல் |