பிறவற்றைக்குறிப்பால் உணர்ந்த வானர வீரர் வினவுதல் 6016. | 'பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை உரைசெய, ஊர் தீஇட்டது ஓங்கு இரும் புகையே ஓத, கருதலர் பெருமைதேவி மீண்டிலாச் செயலே காட்ட, தெரிதரஉணர்ந்தேம்; பின்னர், என் இனிச் செய்தும் ?' என்றார். |
பொருதமை புண்ணேசொல்ல - (வானர வீரர்கள்அனுமனை நோக்கி,நீ சொல்லாவிட்டாலும்) நீ அங்குப் போர் புரிந்ததை உன் உடம்பில் உள்ளகாயங்களே தெரிவிக்கவும்; வென்றமை போந்த தன்மை உரை செய - நீபகைவரை வென்ற தன்மையை நீ இ்ங்கு திரும்பி வந்த நிலையே சொல்லவும்;ஊர் தீ இட்டது ஓங்கு இரும்புகையே ஓத - இலங்கை நகரில் நீ நெருப்புவைத்ததை உயர்ந்து ஓங்கிய பெரிய புகையே அறிவிக்கவும்; கருதலர்பெருமை - அப் பகைவர்களது வலிமை முதலிய சிறப்புகளை; தேவிமீண்டிலா செயலே காட்ட - பிராட்டி உன்னோடு திரும்பி வராத செயலேஎடுத்துக்காட்டவும்; தெரிதர உணர்ந்தோம் - தெளிவாக அறிந்து கொண்ே்டாம்; பின்னர் இனி என் செய்தும் என்றார் - இனிமேல், என்ன செய்யக் கடவோம் என்று வினாவினார்கள். வானர வீரர்உணர்ந்த வகை அனுமான அளவை எனப்படும் - அனுமானம் - காரியத்ததால் காரணம் அறிதல். கருதலர் - நன்மையை எண்ணாதவர். (10) |