6025.

'கண்டனர்அரக்கரை, கறுவு கைம்மிக,
மண்டு அமர்தொடங்கினார், வஞ்சர் மாயையால்
விண்தலம்அதனில் மேயினர்கொல் ? வேறு இலாத்
தண்டல் இல்நெடுஞ் சிறைத் தளைப்
                          பட்டார்கொலோ ?

     அரக்கரைக்கண்டனர் - (சீதையை எடுத்துச்சென்ற இராவணன்
முதலிய) அரக்கர்களைப் பார்த்து; கறுவு கைம்மிக மண்டு அமர்
தொடங்கினார் -
கோபம் அதிகரிக்க, மிகுதியான போரைச் செய்யத்
தொடங்கி; வஞ்சர் மாயையால் விண்தலம் அதனில் மேயினார் கொல் ?
-
வஞ்சகச் செயலுடைய அவ்வரக்கர்களின் மாயச்  செயலால் (இறந்து)
வீரசுவர்க்கத்தில் சென்று சேர்ந்தார்களோ ?; தண்டல் இல்
நெடுஞ் சிறை தளைப்பட்டார் கொலோ ? -
(எக்காலத்திலும்) நீங்குதல்
இல்லாத பெரிய சிறையில் கட்டுப்பட்டார்களோ ?

     ஓ: அசை.                                            (19)