செய்தி உணர்ந்தஇராமபிரான் மகிழ்தல்

6029.

திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;
'வண்டு உறைஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு;அவள் கற்பும் நன்று' எனக்
கொண்டனன்,குறிப்பினால் உணரும்
                             கொள்கையான்.

     குறிப்பினால்உணரும் கொள்கையான் - அவயவங்களின்குறிப்பைக்
கொண்டு நடந்ததை நன்கு உணர்ந்து கொள்ளும் நுண்ணறிவினனான
இராமபிரான்; திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் - மிக்க
வலிமை உடைய அந்த அனுமனது செய்கையை நன்றாகப் பார்த்து அறிந்து;
வண்டு உறை ஓதியும் வலியள் -
வண்டுகள் தங்கும் கூந்தலை உடைய
பிராட்டியும் நன்னிலையில் உறுதியுடன் இருக்கின்றாள்; இவன் கண்டதும்
உண்டு -
இவ்வனுமன் அவளை நேரில் பார்த்து வந்ததும் உண்டு; அவள்
கற்பும் நன்று என கொண்டனன் -
அவளது கற்பும்
சிறப்புடையதாயிருக்கின்றது என்று ஊகித்துக் கொண்டான்.

      அனுமன் தென் திசைநோக்கித் தொழுத செய்கையிலிருந்து, இராமபிரான்உணர்ந்து கொண்ட பிராட்டியின் நிலை பற்றிப் பேசப்பட்டது
என்க.                                                    (23)