6043.

'தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை
                           நோக்கி,
ஐய ! யான்இருந்த காலை, அலங்கல் வேல்
                           இலங்கை வேந்தன்
எய்தினன்;இரந்து கூறி இறைஞ்சினன்;
இருந்து
                           நங்கை
வெய்து உரைசொல்ல, சீறி, கோறல் மேற்கொண்டு
                          விட்டான்.

     ஐய ! - ஐயனே !; தையலை வணங்கற்கு ஒத்த - பிராட்டியை, நான்
எதிர் சென்று வணங்குவதற்குத் தகுதியான; இடை பெறும்
 தன்மை நோக்கி
-
சமயத்தைப் பெறும் நிலையை எதிர்பார்த்து; யான் இருந்த காலை - நான்
இருந்த பொழுது; அலங்கல் வேல் இலங்கை வேந்தன் எய்தினன்- மாலை
அணிந்த வேற்படை ஏந்திய இலங்கை மன்னனாகிய இராவணன் அங்கு வந்து;
இரந்து கூறி இறைஞ்சினன் -
(தன்னை விரும்பும்படி) இரக்கத்தோடு
பலவிதமான வார்த்தைகளைச் சொல்லி, பிராட்டியை வணங்கினான்; நங்கை
இருந்து வெய்து உரை சொல்ல -
பிராட்டி நில்லாது, இருந்து கொண்டே
கடுமையான வார்த்தைகளைக் கூற; சீறி கோறல் மேற் கொண்டு விட்டான்
-
(அதைக் கேட்ட அவன்) கோபித்து, பிராட்டியைக் கொல்லத்தலைப்பட்டு
விட்டான்.

     பிராட்டியின்கற்புத் திண்மையைத் தான் நேரில் காண்பதற்கு நிகழ்ந்த
சந்தர்ப்பத்தை, இதன் மூலம் விளக்கினான் அனுமன் என்க.          (37)