6048. | 'ஒரு கணத்துஇரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற திரு முலைத்தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ ! நின்பால் விரகம்என்பதனின் வந்த வெங் கொழுந் தீயினால் வெந்து உருகியது; உடனேஆறி, வலித்தது, குளிர்ப்பு உள் ஊற. |
செல்வ ! -எல்லாச்செல்வமும் உடையவனே !; ஒரு கணத்து இரண்டுகண்டேன் - ஒரு கணப் பொழுதிலே, ஒன்றற்கு ஒன்று மாறுபாடான இரண்டுவியக்கத்தக்க நிகழ்ச்சிகளையான் பார்த்தேன்; ஒளி மணி ஆழி - (அவைஎன்ன எனில்) விளங்குகின்ற இரத்தினம் பதிக்கப் பெற்ற மோதிரத்தை; ஆன்றதிருமுலைத் தடத்து வைத்தாள் - பிராட்டி, தனது சிறந்த கொங்கைகளின்மேல் வைத்தாள்; வைத்தலும் - வைத்தவுடன்; நின்பால் விரகம் என்பதனின்வந்த வெம் கொழும் தீயினால் வெந்து உருகியது - உன்னிடத்தினின்றும்பிரிந்த விரகதாபம் என்பதனால் உண்டான வெப்பமாகிய செழித்தநெருப்பினால் சூடேறி உருகிவிட்டது; குளிர்ப்பு உள் ஊற உடனே ஆறிவலித்தது - (மோதிரம் உடம்பில் பட்ட மனமகிழ்ச்சியினாலாகிய) குளிர்ச்சிஉடலில் மிகுதலால் அப்பொழுதே (அவ்வெப்பம் தணிந்து) இறுகிமுன் போல்உறுதிப்பட்டுவிட்டது. மோதிரம்,பிராட்டியின் விரகத் தீயால் உருகுதலும், மகிழ்ச்சியாகிய குளிர்ச்சியால் இறுகுதலும் ஆகிய மாறுபட்ட இரு தன்மைகளையும் ஒருகணத்தில் கண்டேன் என்றதாம். விரகம் - பிரிவால் நிகழும் காம வேதனை. (42) |