பக்கம் எண் :

பக்கம் எண் :146

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை

120





125





130





135





140





145
அறங்கரி யாக அருள்சுரந் தூட்டும்
சிறந்தோர்க் கல்லது செவ்வனஞ் சுரவாது
ஆங்ஙன மாயினை அதன்பயன் அறிந்தனை
ஈங்குநின் றெழுவாய் என்றவள் உரைப்பத்
தீவ திலகை தன்னடி வணங்கி
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்

கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு
வானூ டெழுந்து மணிமே கலைதான்
வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்த தென்மகள் வாராள்
வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர்

வந்து தோன்றி யவர்மயக் கங்களைந
தந்தில் அவர்க்கோர் அற்புதங் கூறும்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்

தவ்வைய ராகிய தாரையும் வீரையும
அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன
வாய்வ தாக மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கீங்
கறவண அடிகள் தம்பாற் பெறுமின்

செறிதொடி நல்லீர் உம்பிறப் பீங்கிஃ
தாபுத் திரன்கை அமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதறு மாதவன் பாதம் படர்கேம்

எழுகென வெழுந்தெனள் இளங்கொடி தானென

உரை

1--5.மணிமேகலா தெய்வம் நீங்கியபின்னர்-மணிமேகலா தெய்வம் மந்திரம் அளித்துச் சென்ற பின்னர், மணிபல்லவத்திடை மணிமேகலைதான்-மணிமேகலை மணிபல்லவத்தின்கண் உள்ள, வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற் குன்றுகளையும், வீரிபூஞ் சோலையும் - விரிந்த பூம்பொழில்களையும், தண்மலர்ப் பொய்கையும் - குளிர்ந்த மலர்களையுடைய பொய்கைகளையும், தாழ்ந்தனள்