பக்கம் எண் :

பக்கம் எண் :172

Manimegalai-Book Content
 

 

13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

என்று சொல்ல, அவர்களுள்ளே ஓ ரந்தணன் ''''இவனது பிறப்பினை யான் அறிவேன்," எனக் கூறி, முன்பு குமரியாடப் போந்த சாலியைத்தான் கண்டு வினாவி யறிந்த வரலாற்றை உரைத்து, ''''தூயனல்லாத இவனைத் தொடுதல் செய்யாதீர்,'''' என்ன, ''''தேவ கணிகையாகிய திலோத்தமை பெற்ற மைந்தர்கள் பெரிய முனிவர்களாக இருத்தல் கேட்டிலிரோ? சாலிக்குத் தவறு கூறத் துணிந்தீர்களே,'''' என்று கூறி, ஆபுத்திரன் அவர்களை நோக்கி நகைத்தான்; வளர்த்த பூதியும் அவனை இழிந்தவனென நீக்கிவிட்டான்; அப்பால் ஆபுத்திரன் பிச்சை யேற்றுண்ணத் தொடங்கிய பொழுது, அந்தணர் பதியிலெல்லாம் அவனை ஆகவர் கள்வனென்றிகழ்ந்து, அவனது கடிஞையிற் கல்லிடலாயினர் ; அதனால், அவன் வேறு புகலின்றித் தென் மதுரையை அடைந்து சிந்தா தேவியின் கோயிலின் முன்புள்ள அம்பலத்தில் இருந்து கொண்டு, கையிற் கடிஞை யேந்தி மனைதோறும் சென்று வாங்கிவந்த உணவை,

  ''''காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருக என் றிசைத்துட னூட்டி''''
அவர்களுண்டு எஞ்சியதனையே தான் உண்டு, பிச்சை யோட்டையே தலையணையாக வத்துக்கொண்டு அவ்வம்பலத்திலே நாள்தோறும் இரவிற் கண்படை புரிந்து காலங் கழிப்பானாயினன்.]





5





10





15


மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய
ஆபுத் திரன் றிறம் அணியிழை கேளாய்
வார ணாசியோர் மறையோம் பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து

கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென் றிசைக் குமரி யாடிய வருவோள்
சூன்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை
ஈன்ற குழவிக் கிரங்கா ளாகித்
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கத்

தாயில் தூவாக் குழவி துயர் கேட்டோர்
ஆவந் தணைந்தாங் கதன்றுயர் தீர
நாவால் நக்கி நன்பா லூட்டிப்
போகா தெழுநாட் புறங்காத் தோம்ப
வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன்

இயவிடை வருவோன் இளம்பூதி யென்போன்
குழவி யேங்கிய கூக்குரல் கேட்டுக்