பக்கம் எண் :

பக்கம் எண் :184

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 

[ஆபுத்திரன் அங்ஙனமிருக்கையில் ஒரு நாள் அவனுக்கு
நிகழ்ந்தனைக் கூறுவேன் ; கேட்பாயாக : ஒருநான் நள்ளிரவில் அவன் துயிலும் பொழுது சிலர் வந்து ''வயிறு காய் பெரும்பசி எங்களை வருத்தா நின்றது'' என்றனர். அதனைக் கேட்ட அவன் அத் துன்பத்தை மாற்றுதற்கு ஆற்றலின்றி வருத்த முற்றான் ; அப்பொழுது கலை நியமத்துள்ள சிந்தாதேவி வெளிப்பட்டு வந்து, ''இதனைக் கொள்க ; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாது வளராநிற்கும்'' என்றுரைத்துத் தன் கையினுள்ள அட்சய பாத்திரமொன்றை அவன் கையிற் கொடுத்தனள் ; அவன் அதனைப் பெற்ற மகிழ்ச்சியுற்று,
 

    "சிந்தா தேவி ! செழுங்கலை நியமத்து
  நந்தா விளக்கே ! நாமிசைப் பாவாய் !
  வானோர் தலைவி ! மண்ணோர் முதல்வி !
  ஏனோ ருற்ற இடர் களைவாய்"
 

என்று பரவிப் பணிந்து, பசியால் வருந்தி வந்தோரை ஊட்டி மகிழ்வித்து, அன்றுமுதல் எல்லா உயிர்க்கும் உணவளிப்பானாயினன் ; உண்பதற்காக மக்கள் பலர் அவனைச் சூழ்ந்துகொண்டனர் ; விலங்குகளும் பறவைகளும் அவனைப் பிரிவின்றிச் சூழ்ந்துகொண்டன ; அவ்வாறு நிகழும்போது, அவனது அறத்தின் மிகுதியைத் தனது பாண்டு கம்பள நடுக்கத்தால் அறிந்த இந்திரன் ஒரு முதுமறையோன் வடிவுகொண்டு வந்து நின்ற, "நான் இந்திரன் ; நினது பெரிய தானத்தின்பொருட்டு வரங்கொடுத்தற்கு வந்தேன் ; நீவிரும்பியது யாது?" என்று கூற, ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும்படி சிரித்து,
 

  "அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரு மில்லாத் தேவர்நன் நாட்டுக்
கிறைவ னாகிய பெருவிறல் வேந்தே
 

வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி, அவர்தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை ஒன்றே சாலும்; நின்பாற் பெறத் தக்கது யாது?" என அவனை மதியாதுரைத்தனன் ; உரைக்கவே இந்திரன் வெகுண்டு, உலகிலே பசியால் வருந்துவோ ரில்லையாம்படி செய்வேன் என நினைந்து, எங்கும் மழை பெய்வித்து வளமுண்டாகச் செய்தனன் ; அதனால் பசித்து வருவோர் இலராயினர். அதுகண்டு ஆபுத்திரன் அவ் வம்பலத்தினின்றும் நீங்கி ஊர்தோறுஞ் சென்று, ''உண்போர் யாரேனும் உண்டோ?'' என வினவா