|
நாடகக் கணிகையாதலின்
பாண்மகனையும் யாழையும் உவமை கூறினாளென்க. நயன் இல் காலை -
ஆடவரிடத்துச் செல்வமில்லாத காலத்தில் என்றுமாம். "வண்டிற்
றுறக்குங்கொண்டி மகளிரை" என இக் காதை யிற் பின்பும் கூறப்பட்டுள்ளது;
மதுரைக் காஞ்சி யுள்ளும்
2
"இளம்பல்
செல்வர் வளந்தப வாங்கி, நுண்டா துண்டு வறும்பூத் துறக்கும், மென்சிறை
வண்டின மான" என இவ் வுவமை வந்துள்ளமை அறியற்பாலது. வினை -
நல்வினை. திருவின் செல்வி-திருவாகிய செல்வி. நல்வினை யுலந்த பொழுது திருமகள் நீங்குவது போலும் என்னும் இவ் வுவமை
3
"தவந்தீர்
மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட்
டொரீஇ" எனப் பெருங் கதையுள் வருதல்அறிந்து இன்புறற்பாலது. தாபதக்கோலம்
- தவக்கோலம்.
|