பக்கம் எண் :

பக்கம் எண் :5

Manimegalai-Book Content
1. விழாவறை காதை
 

மெய்த்திறம்-மெய்ந்நூல் வகை ; 1 "யாமெய்யாக் கண்டவற்றுள்" என்பதில், மெய்-மெய்ந்நூலென்னும் பொருட்டாதல் அறிக. 2 ;"மெய்த்திறம் வழக்கென விளம்புகின்ற, எத்திறத்தினு மிசையா திவருரை" என மேல் வருவதனாலும் இப் பொருள் அறியப்படும். நன்பொருள் வீடு என்பவற்றை ஒன்றாயடக்கி, 3 ;"அருமறை விதியு முலகியல் வழக்கும், கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து" என்றார் கல்லாட ஆசிரியர். அகலாராகி எய்திய கடவுளாளர் என்க. வானவ ருருவினை மக்கள் கண்கள் காணப்பொறா வென்பதனை 4 "அந்தரத் துள்ளோ ரறியா மரபின், வந்து காண்குறூஉம் வானவன் விழவும்" " அவளுக்குப், பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விளநலங்காட்டி" என்பவற்றானறிக. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவற்றை, 5 "அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத்தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே," 6 "கரணத் தியலவர் கரும விதிகள், கனகச் சுற்றங் கடைக்காப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீர ரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப" என்னுஞ் சூத்திரங்களா னறிக.

18--26. வான்பதி தன்னுள் - தேவர் நகரமாகிய அமராபதியில்,
        கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம் விடுத்த பூதம்-
        கொடியெடுத்த தேர்ப்படையினையுடைய முசுகுந்த மன்ன
        ற்குப் பகைவரால் நேர்ந்த துன்பத்தினை நீக்கிய நாளங்கா
        டிப்பூதம், விழாக்கோள் மறப்பின் - விழாவெடுத்தலை
        மறந்தால், மடித்த செவ்வாய் வல் எயிறு - இலங்க -
        சினத்தான் மடிக்கப்பெற்ற சிவந்த வாயில் வலிய பற்கள்
        விளங்க, இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
        - இடியொலி போன்ற முழக்கத்துடன் துன்பஞ் செய்யும்,
        தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்து உணும்
        பூதமும் பொருந்தாதாயிடும் - இம் முதுநகரில் அல்லவை
        செய்யும் பாவிகளைக் கையிற்கொண்ட பாசத்தாற் பிணித்துப்
        புடைத்து உண்ணுஞ் சதுக்கப்பூதமும் பகைமை கொள்ளும் ;
        ஆகலின், மாயிரு ஞாலத்து அரசு தலைஈண்டும் - மிகப்பெரிய
        புவியின்கண் உள்ள அரசரெல்லாரும் வந்து செறிதற் கேதுவாகிய,
        ஆயிரங் கண்ணோன் விழா - இந்திரனுக்குச் செய்யும்
        விழாவினை, கால் கொள்க என - தொடங்குகவென்று சொல்ல ;

துயரம்-அவுணர் விட்ட இருட்கணையால் உண்டாகிய துன்பம். விடுத்த-முசுகுந்தற்கு ஓர் மந்திரத்தை யருளி அவ்விருளைப் போக்கிய. பூதம்-புகார்நகரின் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் இரண்டிற்கும் நடுவாகிய நாளங்காடி யிடத்துள்ள பூதம். இவ்வரலாற்றினை,

7 ;"கடு


1 குறள். 200.   2 மணி. 27: 106-7.   3 கல். 66. 4 சிலப். 6: 72-3.
5 சிலப். 9: 33-5. து    6 திவாகரம். 7 சிலப். 6: 7-13.