58--59. தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த
மணலையுடைய பந்தர்களிலும பலரும் தங்கும் அம்பலங்
களிலுப், புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் -
நன்றாகிய அறவுரையை அறிவீர் சேருமீன் ;
மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய
தண்ணீர்ப் பந்தர் என்க. தாழ்தல் -தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம்.
பொருந்துமின் - பொருந்தி உரைமின் என்று கொள்க.
60--61. ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் - தம்தம் சமயத்திற்
பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ்செய்து வாதிக்கும்
சமயவாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து எறுமின்-
வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர்
;
ஒட்டல்-சபதஞ் செய்தல், பொருள்-தத்துவம். பட்டிமண்டபம்-
கலை யாராய்தற்கும், வாது புரிதற்குமுரிய மண்டபம் ;
1
"பகைப்புறத்துக்
கொடுத்த பட்டி மண்டபமும்"
2
"பன்னருங்
கலைதெரி பட்டி மண்டபம்" என்பன காண்க. ஓலக்க மண்டபமென்றும் கூறுவர்.
3
"பட்டி
மண்டப மேற்றினை யேற்றினை" என்பது திருவாசகம்.
62--63. பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்-பகைவரோடாயினும்,
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் - சினமும் போரும்
செய்யாது நீங்குமின் ;
செற்றம் - நெடுங்கால நிற்கும் கோபம்; வயிரம்.
64--67. வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற்குன்றுகளிலும்,
விரிபூஞ் சோலையும் - பரந்த மலர்ப் பொழில்களிலும்,
தண்
மணல் துருத்தியும் - குளிர்ந்த மணலையுடைய யாற்றிடைக்
குறைகளிலும், தாழ் பூந்துறைகளும் -ஆழ்ந்த பொலிவினையுடைய
நீர்த் துறைகளிலும், தேவரும் மக்களும் ஒத்து உடன்திரிதரும்
நாலேழ் நாளினும் - தேவரும் மக்களும் வேற்றுமையின்றிச்
சேர்ந்துலாவும் இருபத்தெட்டு நாட்களிலும், நன்கு அறிந்தீர்
என - இவற்றை நன்கு அறிந்தீராய் என்று ;
அறிந்தீர் : அறிந்தீராகியென வினையெச்சமாக்குக.
68--72. ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் களிறும் குழ்தர -
விளங்குகின்ற வாளினையுடைய வீரரும் தேரும் குதிரையும்
யானையும் சூழ்ந்துவர, கண் முரசு இயம்பி-முகத்தையுடைய
முரசத்தினை அடித்து, பசியும் பிணியும் பகையும் நீங்கி
-
மக்கள்பால் பசியும் நோயும் பகைமையும் நீங்கி, வசியும்
வளனும் சுரக்க என வாழ்த்தி-நாட்டிலே மழையும் வளமும்
பெருகுக என்று வாழ்த்தி,
1
சிலப். 5 : 102.
2
கம்ப. நகர. 62.
3
திருவாசகம், சதகம், 49.
|