|
3.
மலர்வனம் புக்க காதை
|
| |
உண்டோ - பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ?, பேடியர்
அன்றோ பெற்றியின் நின்றிடின் - அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல்
அவர்தாம் பேடியர் அல்லரோ ;
|
ஆய்-ஆராய்ந்தெடுத்த
என்றுமாம்.
1
"ஆவின்
கடைமணி யுகுநீர்" என்பது ஈண்டு அறியற்பாலது. அவளாற்பகை வெல்லக் கருதியிருந்த
காமன் இனி வெல்லுதலரிதென்று படையை ஏறிந்து நடுங்குவா னென்க. உண்டோ, ஓ ;
எதிர்மறை. பெற்றி - இயல்பு. பெற்றியில் நிற்றலாவது - இவளை விரும்பாது நிற்றல்.
ஆடவர் என்றது ஈண்டு இன்பத்துறை நிற்பாரைக் கருதிற்று. பேடியர் - பெண்ணின்பம்
துய்க்குந் தகுதியில்லாதவர்.
|
|
26-27.
|
ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும்,
அணியிழை கேளாய் ஈங்கு இந்நகரத்து யான் வருங் காரணம் - இந்நகரத்தின்கண்
யான் வந்த காரணத்தை மாதவி கேட்பாயாக ;
ஆங்ஙனம் : சுட்டு. ஈங்கு : அசை.
|
|
28-32.
|
பாராவாரம் பல்வளம் பழுநிய-கடல்
தரும் பல வளங்களும் முதிர்ந்த, காராளர் சண்பையில் - காராளருடைய சண்பை நகரத்தில்,
கௌசிகன் என்போன் இரு பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-கௌசிகன் என்னும்
அந்தணனுக்கு ஒரே மகளாயுள்ளயான், ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு - தன்னந்தனியே
செல்வதனை அஞ்சாமல் ஒன்றையும் ஆராயாத உள்ளத்தோடு, ஆராமத்திடை அலர் கொய்வேன்தனை-உப
வனத்திலே மலர் கொய்வேனாயினேன் ; அங்ஙனம் கொய்த என்னை ;
|
பாராவாரப்
பல்வளம் என்பது மெலிந்து நின்றது. காராளர்-ஓர் சாதியார் ;
வேளாளருமாம்.
சண்பை - ஒரு நகரம் ; சீகாழியுமாம்.
|
|
33-41.
|
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
- மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன், திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
- திருமகளும் விரும்பும் இக் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற,
பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் - பெரிய விழாவினைக் காணும் நினைவுடன்
வருகின்றவனாகிய, தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்
தொழு படிமையன் - பூமாலையை யுடையவனும் மணிமாலையையுடையவனும் பொற் பூணினை யுடையவனும்
பூமியிலுள்ளோர், காணலாகாத பலருந் தொழும் தெய்வ வடிவினை யுடையவனுமாகிய அவன்,
எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் - என்னை எடுத்துக் கொண்டு
விசும்பில் எழுந்து அகப்படுத்திக்கொண்டான் ; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
- அப்பொழுது யான் அவனுடைய இன்பத்தின் பகுதியை யுடையே.
|
1
சிலப், 20 : 54.
|
|