பக்கம் எண் :

பக்கம் எண் :33

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை

தன்றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று ஏங்கி,
உண்ணா நோன்போடு-உண்ணா விரதத்துடன், உயவல்
யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை-வருந்து
தலையுடைய யானையைப்போல வருவோனுமாகிய கழுவாத
உடலையுடைவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன் -
வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை
வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ எம்
முடைய பெருமானே அடியேன் மொழியைக் கேளும், அழுக்குடை
யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச் செறிந்த உடலின்
கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப் பட்டோர்
போன்று உளம் வருந்தாது - புழுக்கத்தினைத் தரும் அறையில்
அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம்,
இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன் வயின்
தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலிவருரைத்ததாகிய
இம்மை யின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும் முடிவில்
லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான,
கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின்
- சொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற
இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?, மெய்த் தவத்
தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு
தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை உண்டு
தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க பயனைக்
கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென - தேறலையன்றி
எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி
தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன
முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும் ஓர் களிமகன்
பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற ஒரு கட்குடியன்
பின் நிற்போரும் ;

சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை;

1 "கல்பொளிந்தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி" என்பது காண்க. அராந்தாணம் - அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன் பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான். தலைமகன்-ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலையொன்றுமே கடியற்பாலதென்பதனை உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம். இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி, யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை

------------------------------------------------------------------------------
1 மதுரை, 482-3.
------------------------------------------------------------------------------