Tamil Virtual University - Manimegalai

 

4 பளிக்கறை புக்க காதை
[ மணிமேகலை உதயகுமரனைக்கண்டு
பளிக்கறை புக்க பாட்டு ]

பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு

இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில

குழல்இசைத் தும்பி கொளுத்திக் காட்ட

மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
5
வெயில்நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்

மயில்ஆடு அரங்கில் மந்திகாண் பனகாண்;

மாசுஅறத் தெளிந்த மணிநீர் இலஞ்சிப்

பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று

ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை

10

அரச அன்னம் ஆங்குஇனிது இருப்பக்

கரைநின்று ஆலும் ஒருமயில் தனக்குக

கம்புள் சேவல் கனைகுரல் முழவாக்

கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய

இயங்குதேர் வீதி எழு துகள் சேர்ந்து

15

வயங்குஒளி மழுங்கிய மாதர்நின் முகம்போல

விரைமலர்த் தாமரை கரைநின்று ஓங்கிய

கோடுஉடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த

வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண்;

மாதர் நின்கண் போதுஎனச் சேர்ந்து

20

தாதுஉண் வண்டுஇனம் மீதுகடி செங்கையின்

அம்சிறை விரிய அலர்ந்த தாமரைச்

செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டுஆங்கு

எறிந்துஅது பெறாஅது இரைஇழந்து வருந்த

மறிந்து நீங்கு மணிச்சிரல் காண்எனப்

25

பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட,

மணிமே கலைஅம் மலர்வனம் காண்புழி,

மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன்

உதய குமரன் உருகெழு மீதூர

மீயான் நடுங்க நடுவுநின்று ஓங்கிய

30

கூம்புமுதல் முறிய வீங்குபிணி அவிழ்ந்து

கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு

இதைசிதைந்து ஆர்ப்பத் திரைபொரு முந்நீர்

இயங்குதிசை அறியாது யாங்கணும் ஓ(r

மயங்குகால் எடுத்த வங்கம் போலக்

35

காழோர் கையற மேலோர் இன்றிப்

பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்துக்

கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்

பீடிகைத் தெருவும் பெருங்கலக்கு உறுத்துஆங்கு

இருபால் பெயரிய உருகெழு மூதூர

40

ஒருபால் படாஅது ஒருவழித் தங்காது

பாகும் பறையும் பருந்தின் பந்தரும

ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப

நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக

கால வேகம் களிமயக்கு உற்றென

45

விடுபரிக் குதிரையின் விரைந்துசென்று எய்திக்

கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி

அணித்தேர்த் தானையொடு அரசிளங் குமரன்

மணித்தேர்க் கொடுஞ்சி கையால் பற்றிக்

கார்அலர் கடம்பன் அல்லன் என்பது

50

ஆரங் கண்ணியில் சாற்றினன் வருவோன்,

நாடக மடந்தையர் நலங்கெழு வீதி

ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்

சாளரம் பொளித்த கால்போகு பெருவழி

வீதிமருங்கு இயன்ற பூஅணைப் பள்ளித

55

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி

மகர யாழின் வான்கோடு தழீஇ

வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின

எட்டி குமரன் இருந்தோன் தன்னை,

மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்

60

யாதுநீ உற்ற இடுக்கண் என்றலும்,

ஆங்குஅது கேட்டு வீங்குஇள முலையொடு

பாங்கில் சென்று தான்தொழுது ஏத்தி

மட்டுஅவிழ் அலங்கல் மன்ன குமரற்கு

எட்டி குமரன் எய்தியது உரைப்போன்:

65

வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்

தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம

மாதவி பயந்த மணிமே கலையொடு

கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற

நெஞ்சுஇறை கொண்ட நீர்மையை நீக்கி

70

வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது

இதுயான் உற்ற இடும்பை என்றலும்,

மதுமலர்த் தாரோன் மனம்மகிழ் எய்தி

ஆங்குஅவள் தன்னைஎன் அணித்தேர் ஏற்ற

ஈங்குயான் வருவேன் என்றுஅவற்கு உரைத்து ஆங்கு

75

ஓடுமழை கிழியும் மதியம் போல

மாட வீதியின் மணித்தேர் கடைஇக்

கார்அணி பூம்பொழில் கடைமுகம் குறுகஅத்

தேர்ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்,

சித்திரா பதியோடு உதய குமரன்உற்று

80

என்மேல் வைத்த உள்ளத் தான்என

வயந்த மாலை மாதவிக்கு ஒருநாள்

கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின

ஆங்குஅவன் தேர்ஒலி போலும் ஆயிழை

ஈங்குஎன் செவிமுதல் இசைத்ததுஎன் செய்கென

85

அமுதுஉறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும்

சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல

பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென்று

ஒளித்து அறை தாழ்கோத்து உள்ளகத்து இரீஇ

ஆங்குஅது தனக்குஓர் ஐவிலின் கிடக்கை

90

நீங்காது நின்ற நேர்இழை தன்னைக்

கல்என் தானையொடு கடுந்தேர் நிறுத்திப்

பல்மலர்ப் பூம்பொழில் பகல்முளைத் ததுபோல்

பூமரச் சோலையும் புடையும் பொங்கரும்

தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம்

95

அரசிளங் குமரன் ஆரும்இல் ஒருசிறை

ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன்

வளர்இள வனமுலை மடந்தை மெல்இயல

தளர்இடை அறியும் தன்மையள் கொல்லோ

விளையா மழலை விளைந்து மெல்இயல

100

முளைஎயிறு அரும்பி முத்துநிரைத் தனகொல

செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி

வெங்கணை நெடுவேள் வியப்புஉரைக் கும்கொல்

மாதவர் உறைவிடம் ஒரீஇமணி மேகலை

தானே தமியள்இங்கு எய்தியது உரைஎனப்,

105

பொதிஅறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தி

மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்:

இளமை நாணி முதுமை எய்தி

உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்

110

செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ?

 

அனையது ஆயினும் யான்ஒன்று கிளப்பல

வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி:

வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது

புனைவன நீங்கில் புலால்புறத்து இடுவது

115

மூப்புவிளிவு உடையது தீப்பிணி இருக்கை

பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்

புற்றஅடங்கு அரவின் செற்றச் சேக்கை

அவலக் கவனா கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது

120

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய

என்று அவள் உரைத்த இசைபடு தீஞ்சொல

சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்,

பளிங்குபுறத்து எறிந்த பவளப் பாவையின்

125

இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்என்.

பளிக்கறை புக்க காதை முற்றிற்று.