|
50
55 |
இன்னுங் கேளாய் இலக்குமி நீநின்
தவ்வைய ராவோர் தாரையும் வீரையும்
ஆங்கவர் தம்மை யங்கநாட் டகவயின்
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்
துச்சய னென்போன் ஒருவன் கொண்டனன்
அவருட னாங்கவன் அகன்மலை யாடிக்
கங்கைப் பேரியாற் றடைகரை யிருந்துழி |
|
இன்னும்
கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக, நின் தவ்வையர் ஆவோர் தாரையும்
வீரையும் - நின் முற் பிறந்தோர் தாரையும் வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை,
அங்கநாட்டு அகவயின் - அங்கநாட்டினுள்ளதாகிய, கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் -
கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன்
ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும் பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை
ஆடி - அம் மன்னவன் அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப்பேரியாற்று
அடைகரை இருந்துழி - கங்கையாற்றின் அடைகரையில் இருந்தபொழுது ;
|
குதவ்வை
- தமக்கை ; 1"செய்யவள், தவ்வையைக்
காட்டிவிடும்" என்பது காண்க.
|
1 குறள்.
197
|
|