|
135
|
தந்தில் அவர்க்கோர் அற்புதங் கூறும்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துரகத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்
தவ்வைய ராகிய தாரையும் வீரையும்
அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன |
|
அந்தில்
அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் - அவ்விடத்தில்
அவர்கட்கு ஓர் அற்புதத்தைக் கூறுவாள், இரவிவன்மன் ஒரு
பெருமகளே - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே,
துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைச் சேனைகளையுடைய
துச்சயனுடைய மனைவியே, அமுதபதி வயிற்று அரிதில் தோன்றி-
அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப் பிறந்து, தவ்வையா
ஆகிய தாரையும் வீரையும்-எனக்குத் தமக்கையராகிய தாரையும்
வீரையுமாய நீவிர், அவ்வையர் ஆயினீர்-இப்பிறப்பில் எனக்குத்
தாயர் ஆயினீர், நும் அடி தொழுதேன் - நும்முடைய அடிகளை
வணங்கினேன் ;
தேவி
- மாதவி ; சுதமதியுமாம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர்
- தாய்மார் ; மாதவிக்குத் தோழியாகலின் செவிலி யென்பது
பற்றிச் சுதமதியையும் தாய் என்றாள். |
|