|
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
|
25
|
நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத்
தம்பதிப் பெயர்ந்து தமரொடுங் கூடி
மார்பிடை முந்நூல் வளையா முன்னர்
நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி
ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம்
நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின் |
|
நம்பி
பிறந்தான் பொலிக நம் கிளை என-மகன் பிறந்தனன் இனி நன் கிளை பொலிவுறுக என்று,
தம் பதிப் பெயர்ந்து தமரொடுங்கூடி - தம் மூரின்கட் சென்று உறவினருடன் கூடி, மார்பிடை
முந்நூல் வனையா முன்னர்-மார்பின்கண் முந்நூல் அணிதற்கு முன்னரே, நாவிடை நன்னூல் நன்கணம்
நவிற்றி - நாவினால் மறைகளை நன்கு பயிலச் செய்ய, ஓத்துடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்
- மறையோதும் அந்தணர்கட்குப் பொருந்துவன அனைத்தையும், நாத்தொலைவின்றி நன்கனம்
அறிந்தபின் - சொல்வன்மை குன்றாமல் நன்குணர்ந்த பின்னர் ;
|
முந்நூல்
- பூணுநூல், விரைவுபற்றி வனையா முன்னர் என்றார். நாவிடை - நாவால். நவிற்றி - கவிற்றி
வென்க. நவிற்றுதல் - அடிப்படப் பயில்வத்தல். நாத் தொலைவின்றி-நாவானது தோற்றல்
இல்லையாக; பிறிதோர் சொல் வெல்லுஞ் சொல் இன்மையறிந்து சொல்ல வல்லனாக என்றபடி. |
|
|