|
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
|
40
45 |
அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம்
கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி
ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய
நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச்சிறு மகனே போக்கப் படுதியென்
றலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப |
|
அடர்க்குறு
மாக்களொடு அந்தனர் எல்லாம்-நெருக்குதலைச் செய்யும் முழுவலியுடைய மக்களோடு அந்தணர்
அனைவரும் கூடி, கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி - அருநெறியில் அவனைப் பசுவொடு பிடித்துக்கொண்டு,
ஆ கொண்டு இந்த ஆரிடைக்கழிய- பசுவைத் திருடிக்கொண்டு இந்த அரிய வழியிலே நீங்குமாறு,
நீ மக னல்லாய் நிகழ்ந்ததை உரையாய்-மகனல்லையாகிய நீ நிகழ்ந்த காரணத்தைக் கூறுவாயானால்,
புலைச் சிறு மகனே போக்கப்படுதி என்று - புலைத் தொழிலையுடைய கீழ்மகனே விலக்கப்படுவாய்
என்று, அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப-வருத்துதலைச் செய்யும் கோலினால் அடித்துக்
கேட்க ;
|
அடர்க்குறு
- பகையாயினாரை நெருக்கி வருத்துதலைச் செய்யும். வேள்விப் பசுவைக் கவர்ந்தமையின்
புலைச்சிறுமகன் என்றார். உரையாய் உரைப்பின் போக்கப்படுதி யென்க. போக்கப்படுதல்-தண்டத்தினின்றும்
அகற்றப்படுதல். மகனல்லாய் - மகனாதற் றன்மை உடையை யல்லாய் ; மக்கட்டன்மை யில்லாய்
; 1"மகனல்லை
மன்ற வினி" 2"மகனல்லான் பெற்ற
மகன்" என்பன காண்க. குறுமாக்கள் எனப் பிரித்தலும், நீசமகனல்லாய் எனப் பாடங்கொள்ளலும்
ஈண்டைக்குப் பொருந்துவன அல்ல.
|
1
கலி. பாலை, 19: 6. 2
கலி. மருதம், 19: 13.
|
|