|
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
|
60
|
பொன்னணி நேமி வலங்கொள்சக் கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய
அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ்
ஆமக னாதற் தொத்தனை அறியாய்
நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும் |
|
பொன்
அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னாலாகிய அழகிய வட்டத்தினையுடைய சக்கரப்
படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதலவன் மகன் எமக்கு அருளிய- நிலைபெற்ற உயிர்கட்கு
முதல்வனாகிய திருமாலினுடைய மகனான நான்முகன் எங்கட்கு அருளிச்செய்த, அருமறை நன்னூல்
அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச்
சிறியை நீ - சுழலுகின்ற உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை
- அப் பசுவின் புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய
அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும் ;
|
வலங்கொள்
- வெற்றியைக் கொள்ளும் என்றுமாம். தெருமரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும்
அறிவிலா னென்பார், 'ஆ மகனாதற் கொத்தனை' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம்.
மகனல்லாய் என்பதற்கு இக் காதையுள் முன் உரைத்தமை காண்க. |
|
|