பாத்திர மரபு கூறிய காதை

ஆங்கவற் கொருநாள் அம்பலப் பீடிகைப்
பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்

1
உரை
2

     ஆங்கவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகைப் பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்-அந்த ஆபுத்திரனுக்கு அம்பலப்பீடிகையினிடம் ஒரு நாள் நேர்ந்ததைப் பூங்கொடியனைய நங்காய் கேட்பாயாக; ஆங்கவன்: ஒரு சொல். நல்லா யென்றது மணிமேகலையை.