பாத்திர மரபு கூறிய காதை



5
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்
தாரிடை உழந்தோர் அம்பல மரீஇத்
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆரஞர் எய்தக்

3
உரை
8

     மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து-மழைத்துளிகளையுடைய இடையாமத்தில் வலிய இருட்கலப்பிலே, ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇ - அரிய வழியில் வருந்தி வந்தோர் சிலர் அம்பலத்தையடைந்து, துயில்லோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி - உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனை யெழுப்பி வணங்கித் துதித்து, வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும் - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது வருத்தும் என உரைத்தலும், ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் - இரந்துண்ணும் உணவினையன்றி வேறு உணவில்லாத ஆபுத்திரன், ஆற்றுவது காணான் ஆரஞர் எய்த - உதவுதற்குரிய வழியைக் காணாதவனாய் மிக்க துயரத்தை அடைய ;

     உழந்தோர் - கூத்தர் முதலியோர் என்றுரைப்பாரு முளர். வயிறு காய் பெரும்பசிக்கு முன் (11: 110) உரைத்தமை காண்க.

     மலைக்கும் - மாறுபடுத்தும். நல்லிருளாகலின் ஆற்றுவது காணானாயினான்.