|
பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை
|
40
45 |
மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி
மக்களை யில்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப
அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான் |
|
மண்ணாள்
வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும் மன்னனாகிய
பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை வணக்கஞ் செய்து,
மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை
என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன் என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்துவர,
அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால்,
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான். அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய
மன்னவனாயினன் ;
|
மாதவன்
: முன்னிலையிற் படர்க்கை. அரைசு : இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை ; அவன்
மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத்தலுமாம்; ஆபுத்திரனுக்குப்
புண்ணியராசன் என்னும் பெயருண்டென்பது பின்னர் அறியப்படும். நிரைதார்: வினைத்தொகை.
இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது.
|
|
|