|
85
90 |
மயக்குங்
கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் |
|
மயக்கும்
கள்ளும் மன்னுயிர் கோறலும்-அறிவை மயக்கும் கள்ளுண்டலையும் நிலைபெற்ற உயிர்களைக்
கொல்லுதலையும், கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்-கலக்கமற்ற அறிவினையுடையோர் விலக்கினர்,
கேளாய்-கேட்பாயாக, பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்- உலகில் பிறந்தோர்கள்
இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்-உறங்குவதும்
உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளமையான், நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்-நல்ல
அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், அல்லறம்
செய்வோர் அருநரகு அடைதலும் - தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச்
செய்யும் நிரயத்தை அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் - உண்மை என்று
உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர், கண்டனை
யாகென - நீ அறிவாயாக என்றுரைக்க ;
கோறல்
- கொன்றுண்டல் என்றுமாம். கயக்கு-கலங்குதல்; ஈண்டுக் கலக்கமாவது அறிவின் திரிபு.
சாதலும் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போலுதல் 1"உறங்குவது
போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்னும் வாயுறை வாழ்த்தானும் அறியப்படும்.
சாதல் உறங்கலும் பிறத்தல் விழித்தலுமென நிரனிறை.அல்லறம்-அறமல்லது;
பாவம்.
1
குறள். 339.
|
|