|
50
55
|
வாடுபசி உழந்து மாமுனி போயபின்
பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென்
அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற
இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி
ஆரணங் காகிய அருந்தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை
வானூ டெழுகென மந்திரம் மறந்தேன் |
|
வாடு
பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின்,
பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவிகளையுடைய பயனுடைய பொதியின்
மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை
ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு
எய்தி-விளங்கும் ஒளியையுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால்
- அரிய தெய்வத்தன்மை யுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும்
கடிய நோயால் வருந்தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ;
|
அலவலைச்
செய்தி - ஆராயாது செய்த செய்தி ; அலமருதலைச் சய்யும்செய்தியென்றுமாம்; 1"அவலலையுடையை"
என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. விலகொளி எனப் பிரித்தலுமாம் ; விலகு
ஒளி - விட்டு விளங்கும் ஒளி. காரணமின்றியே கனியைச் சிதைத்துக் கடுநோயுழந்தனை என
விரித்துரைத்துக்கொள்க.
|
1 கலி.
நெய்தல்: 5.
|
|