|
|
தண்மணற்
பந்தருந் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் |
|
தண்மணற்
பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த மணலையுடைய பந்தர்களிலும பலரும் தங்கும் அம்பலங்களிலுப்,
புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் - நன்றாகிய
அறவுரையை அறிவீர் சேருமீன் ;
மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய
தண்ணீர்ப்பந்தர் என்க. தாழ்தல் - தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம். பொருந்துமின் - பொருந்தி
உரைமின் என்று கொள்க. |
|