வச்சிரக்
கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை,
கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம் ஏற்றி,
ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை-வென்ற
நல்லேற்றின் உரியாற் போர்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை யுடையதும் கூற்றுவனை
யழைப்பதும் குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப்
பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற தொல்குடிப் பிறந்த வள்ளுவன்,
திரு விழைமூதூர் வாழ்க என்று ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று
துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை மழை பொழிக, மன்னவன் கோள்நிலை
திரியாக் கோலோன் ஆகுக - அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய
செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி ;
|
பிடரிடம். வீர முரசிற்கு வென்ற ஏற்றின் தோலை
மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை' 1"
மண்கொள வரிந்த வைந்துதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை
சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு - உவமவுருபு. இடியுரும்
என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண் : கண் - அசை. கடிப்பிகூஉம் என்னும்
பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்; 2"
முரசுகடிப் பிகுப்பவும்" என்பது காண்க. என்று வாழ்த்தியென விரித்துரைக்க. மூதூர் வாழ்க
மாரிபொழிக கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல்
கோடின் கோட்கள் நிலை திரியும் என்பது, 3"கோனிலை
திரிந்திடிற் கோணிலை திரியும்" 4"கோணிலை
திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப் பிறந்தோன்
முரசம் ஏற்றி ஏத்தி என்றியைக்க.
1
புறம். 287. 2 புறம். 157. 3
மணி. 7: 8. 4 சீவக. 255.
|