சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை

அகல்வாய் ஞாலம் ஆரிரு ளுண்ணப்
பகலர சோட்டிப் பணையெழுந் தார்ப்ப
மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு
20 நீல யானை மேலோர் இன்றிக்
காமர் செங்கை நீட்டி வண்டுபடு
பூநாறு கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து
நிறையழி தோற்றமொடு தொடர முறைமையின்


17
உரை
23

       அகல்வாய் ஞாலம் ஆரிருள் உண்ண-இடமகன்ற பூமியை நிறைந்த இருளானது உண்ணுமாறு, பகல் அரசு ஓட்டி - கதிரவனாகிய அரசனை ஓட்டி, பணைஎழுந்து ஆர்ப்ப - பறையெழுந்து ஒலிக்க, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு - அந்திக் காலமாகிய நெற்றியும் வானிலுள்ள பிறையாகிய மருப்பும் உடைய, நீலயானை- கரிய நிறமுடைய இரவாகிய யானை, மேலோர் இன்றி - பாகர் ஓரு வரும் இன்றி, காமர் செங்கைநீட்டி-விருப்பமாகிய துதிக்கையை
நீட்டி, வண்டுபடு பூ நாறு கடா அம் செருக்கி - வண்டு மொய்க்கும் பூவின் மணம் பொருந்திய மதநீரைச் சொரிந்து களித்து, கால் கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர - காற்றைப் போல
எழுந்து காவலைக் கடந்த தோற்றத்துடன் தொடர்ந்து வர ;

       
முன்னுள்ள விசேடணங்களால் 'நீலயானை' என்றது இரவாயிற்று.
இராத்திரியை யானையாக உருவகிப்பவர் அதற் கியைபுபடப் பிறவற்றையும் உருவகஞ் செய்கின்றார். "ஞாலம் ஆரிருள் உண்ண' என்பது 1"உண்டற்குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலூமரபே" என்பதனான் அமைக்கப்படும். கொல்களிற்றின் செல்கையை அறிவித்தற்குப் பறையறைவித்தலுண்மையின் 'பணையெழுந்தார்ப்ப' என்றார். 2"வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம்" என்பது காண்க ; வென்றி முரசுங் கொள்க. மேலோரின்றி என்றது பாகரை வீசி யென்றபடி ; 3 "மேலோர் வீசி" என்றார் பிற சான்றோரும், காமர் - காமம் என்னும் பொருட்டு. கடக்களிறு கைவீசிச் செல்லுமாகலின் ' காமர் செங்கை நீட்டி' என்றார். பூ - வேங்கைப்பூ ; ஏழிலைப் பாலையின் மலருமாம்; யானையின் மதம். அப்பூக்களின் மணமுடையதாதலை, 4 "விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ" 5"பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப் பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்த தோர் களிறு" என்பவற்றானறிக. 6"கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு" என்பதனால் யானை காற்றுப்போற் கிளர்ந்தெழு மென்பதறிக.
பெயர்வோன்றன்னை நீலயானை தொடர வென்க : இரவு வர
என்றவாறாயிற்று.

1தொல். பொருளியல். 19. 2 பொருந. 171-2. 3 மதுரைக். 381. 4 கம்ப. நகர. 58. 5 கம்ப. வரை. 6 6 முருகு. 82. .