|
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
|
140
145
|
வருக
வருக மடக்கொடி தானென்று
அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின்
வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத்
தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார்
யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று
அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும் |
|
வருக வருக மடக்கொடிதான்
என்று அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின் - அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக
வருக என்று அரசன் அருண்மிகுந்த உளத்தினோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான்
சென்று- வாயில் காவலரால் மணிமேகலை அரசன்முன் சென்று, ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய
என - ஆராய்ந்து வீரக் கழலை யணிந்த மன்னவனது அருள் வாழ்க என்று கூற, தாங்கரும் தன்மைத்
தவத்தோய் நீ யார் - பொறுத்தற்கரிய தன்மைகளையுடைய தவத்தினை யுடையோய் நீ யார்,
யாங்காகியது இவ் வேந்திய கடிஞை என்று - நின் கையிலேந்திய இப் பாத்திரம் யாண்டுக்
கிடைத்தது என்று, அரசன் கூறலும் - வேந்தன் வினவுதலும், ஆயிழை உரைக்கும் - அவள் கூறுவாள்
;
அடுக்கு விரைவு பற்றியது. அழைத்து வருக
வென்று வாயிலாளர்க்குக் கூற வென்க. தாங்கருந் தன்மை-பிறராற் பொறுத்தற்கரிய தன்மை. |
|