|
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
|
|
நகர நம்பியர்
வளையோர் தம்முடன் |
25 |
மகர வீனையின்
கிளைநரம்பு வடித்த
இளிபுண ரின்சீர் எஃகுளங் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சிற் புகையெரி பொத்திப்
பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின் |
|
முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன் - நக ரத்திலுள்ள காதலஞ்செல்வர் மகளிர் தம்மோடு
முறைமையாக, மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு
உளம் கிழிப்ப - மகரயாழின் கிளைநரம்புகளைத் தெறித்த இசையுடன் சேர்ந்த இனிய தாளவொற்றாகிய
வேல் உளத்தைக்கிழிப்ப, பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்தி-பொறுக்கலாற்றாத
உள்ளத்தின்கண் புகைகின்ற காமத்தீயானது மூட்டப்பட்டு, பறாஅக் குருகின் உயிர்த்து அவன்
போயபின்-கொல்லன் உலை மூக்கினைப் போல வெய்துயிர்த்து இளங்கோ சென்றபின்னர் ;
வளையோர்-வளையணிந்த
மகளிர். நம்பியரும் வளையோரும் வடித்த இளிபுணர் இன்சீர் என்க. மகர வீணை - மகரயாழ்
; நால்வகை யாழுளொன்று ; பதினேழு நரம்புகளையுடையது. கிளை - ஐந்தாம் நரம்பு ; உழை சட்சமாகலின்,
சடசக்கிரமத்தில் அதற்கைந்தாவதாகிய குரல்
கிளையாகும்; அங்ஙனமே இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்பனகுரல் முதல் ஒன்றற்கொன்று
கிளையாகும் ; ஆகலின் இவ்வைத்தனையுமே கிளைநரம் பென்றலுமுண்டு ; "கிளையெனப் படுவ கிளங்குங்
காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகு மென்ப"
என்னும் பழைய நூற்பாவுங் காண்க. வடித்தல் - நரம்பை உருவுதல் ; தெறித்தலுக்காயிற்று.
இளியென்பது ஏழுநரம்பினுள் ஒன்றன் பெயராதலன்றி, இசையைக் குறிக்கும் பொதுப் பெயருமாம்,
சீருடன்கூடிய இளியாகிய எஃகு என்க. பறாஅக் குருகு - கொல்லன் உலைமூக்கு ; பூவா வஞ்சி முதலியன
போல வெளிப்படையென்னும்இலக்கணத்தது. அவன் - உதயகுமரன். |
|