|
சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை
|
|
உறையுட்
குடிகை உள்வரிக் கொண்ட |
30 |
மறுவில்
செய்கை மணிமே கலைதான்
மாதவி மகளாய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிட லீயான்
காய்பசி யாட்டி காயசண் டிகையென
ஊர்முழு தறியும் உருவங் கொண்டே |
35
|
ஆற்றா மாக்கட் காற்றுந்
துணையாகி |
|
உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட -
உறைவிடமாகிய சிறிய கோயிலின்கண் வேற்றுருவ மெய்திய, மறுவில் செய்கை மணிமேகலைதான்
- குற்றமற்ற செய்கையையுடைய மணிமேகலை, மாதவி மகளாய் மன்றம் திரிதரின்-மாதவியின்
மகளாகவே உலக அறவியிற் சுற்றிக்கொண்டிருந்தால், காவலன் மகனோ கைவிடலீ யான் - மன்னவன்
புதல்வன் கைவிடான் என நினைந்து, காய்பசி யாட்டி காயசண்டிகை என ஊர் முழுதறியும் உருவங்கொண்டே
- ஊரிலுள்ளோர் அனைவராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயினையுடைய காயசண்டிகையைப்
போல உருவங்கொண்டு, ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி-வறியோர்க்கு உதவிபுரியும்
அருந்துணையாகி ;
உள்வரி - வேற்றுரு ; பொய்வேடம்.
விடலீயான் : வினைத்திரி |
சொல். கைவிடனென நினைந்து
என ஒரு சொல் வருவித்துரைக்க. |
|