|
உதயகுமரனை வாளால் எறிந்த காதை
|
|
மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் |
15 |
பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று
பற்றினன் கொண்டென் பொற்றே ரேற்றிக்
கற்றறி விச்சையுங் கேட்டவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே
மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து |
20 |
பலர்பசி
களையப் பாவைதான் ஒதுங்கிய
உலக வறவியின் ஊடுசென் றேறலும் |
|
அத்
தோட்டு ஆர் குழலியை - மலர்களை யணிந்த கூந்தலையுடைய அம் மணிமேகலையை, மதியோர் எள்ளினும்
மன்னவன் காயினும் - என்னை அறிவுடையோர் இழித்துக் கூறினும் அரசன் சினப்பினும், பொதியில்
நீங்கிய பொழுதிற் சென்று-அவள் அம்பலத்தினின்றும் வெளிப்படும் போதிற் சென்று, பற்றினன்
கொண்டு என் பொற்றேர் ஏற்றி - பிடித்துக் கொண்டு எனது பொற்றேரில் ஏற்றி, கற்றறி
விச்சையும் கேட்டு - அவள் கற்றுத் தெளிந்த வித்தையையும் கேட்டு, அவள் உரைக்கும் முதுக்குறை
முதுமொழி கேட்குவன் என்றே - அவள் கூறும் பேரறிவுடைய முதுமொழியையும் கேட்பேன் என்று,
மதுக்கமழ் தாரோன் மனங்கொண்டு எழுந்து-தேன் கமழும் மாலையையுடைய உதயகுமரன் உள்ளத்திற்கொண்டு
எழுந்து, பலர் பசிகளையப் பாவை தான் ஒதுங்கிய - பலருடைய பசியையும் நீக்குமாறு மணிமேகலை
ஒதுங்கியுள்ள, உலக வறவியின் ஊடு சென்று ஏறலும் - உலக வறவியினுள்ளே ஏறிச் செல்லலும்
;
தோடார்
குழலி, தோட்டார் குழலி யென விகாரமாயிற்று. தோடு-இதழ்; பூவுக்கு ஆகுபெயர்; தொகுதி
யென்றுமாம். பொதியில்- பொது இல் ; பலருக்கும் பொதுவான இடம் ; அம்பலம். பொதுவில்
எனற்பாலது பொதியில் என மரூஉவாயிற்று. குழலியைப் பற்றனன் கொண்டு என இயைக்க. பற்றினன்
கொண்டு - பற்றிக்கொண்டு. |
|